/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா
/
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா
ADDED : செப் 11, 2024 10:39 PM
அன்னுார் : அன்னுார் அருகே பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் இக்கோவிலில் புரட்டாசி மாதம் ஆறு சனிக்கிழமைகளில் திருவிழா நடக்கிறது. திருவிழா நாட்களில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் வந்து பெருமாளை வழிபடுவர். இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா வருகிற 14ம் தேதி நடக்கிறது. காலை 5:00 மணிக்கு மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெறுகிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பசூர் கோதண்டராமர் கோவில் பஜனை குழுவின் இசைக் கச்சேரி நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. வருகிற 21ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பசூர் மற்றும் பகத்தூர் பஜனை குழுவின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. தொடர்ந்து அக். 19ம் தேதி வரை ஆறு சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு, கோவை, அன்னுார், அவிநாசி மற்றும் புளியம்பட்டியில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.