/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் மாநில செஸ் போட்டி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
/
கோவையில் மாநில செஸ் போட்டி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கோவையில் மாநில செஸ் போட்டி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கோவையில் மாநில செஸ் போட்டி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ADDED : மே 29, 2024 12:42 AM

கோவை:இந்துஸ்தான் கல்லுாரியில் நடக்கும், மாநில அளவிலான ஓபன் செஸ் போட்டியில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், கோவை மாவட்ட செஸ் சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், 74வது தமிழ்நாடு மாநில ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.
கல்லுாரி செயலாளர் சரஸ்வதி, செயலாளர் பிரியா தலைமையில், வரும் 31ம் தேதி வரை போட்டி நடக்கிறது.
போட்டியை, தமிழ்நாடு மாநில செஸ் சங்க துணை தலைவர் ஆனந்தராம் துவக்கி வைத்தார்.
35 மாவட்டங்களில் இருந்து, 276 சர்வதேச தர போட்டியாளர்கள் உட்பட, 504 பேர் பங்கேற்றுள்ளனர். ஐந்து நாட்கள் நடைபெறும் இப்போட்டி, மொத்தம் ஒன்பது சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
துவக்க விழாவில், தமிழ்நாடு மாநில செஸ் சங்க துணை தலைவர் விஜயராகவன், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி, கோவை மாவட்ட செஸ் சங்க தலைவர் செந்தில் சின்னசாமி, துணை தலைவர் இன்திகாப் அலாம், செயலாளர் தனசேகர், இந்துஸ்தான் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் முதல் இரண்டு சுற்றுகள் முடிவில், கோவையை சேர்ந்த ஆகாஷ், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், திண்டுக்கல் வீரர் லட்சுமி நாராயணன், கோவை நந்திஸ் உள்ளிட்ட 51 போட்டியாளர்கள் இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளனர்.