ADDED : பிப் 22, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 16ம் தேதி சிறுமியை, கல்லுாரி மாணவர்கள் ஏழு பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
ஏழு பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேசிய மகளிர் ஆணையம், இவ்வழக்கு தொடர்பாக விரிவான எப்.ஐ.ஆர்., மற்றும் நடவடிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை, மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

