sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய டெங்கு ஒழிப்பு தினம் சுகாதார துறைக்கு 'மாஸ் கிளினிங்' உத்தரவு

/

தேசிய டெங்கு ஒழிப்பு தினம் சுகாதார துறைக்கு 'மாஸ் கிளினிங்' உத்தரவு

தேசிய டெங்கு ஒழிப்பு தினம் சுகாதார துறைக்கு 'மாஸ் கிளினிங்' உத்தரவு

தேசிய டெங்கு ஒழிப்பு தினம் சுகாதார துறைக்கு 'மாஸ் கிளினிங்' உத்தரவு


ADDED : மே 16, 2024 02:25 AM

Google News

ADDED : மே 16, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அனைத்து நிறுவனங்களும் 'மாஸ் கிளினிங்' மேற்கொள்ள சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி கொசு உற்பத்தி துவங்கியுள்ளது. இதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு டெங்கு தடுப்பு பணிகளை தற்போதே துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும், தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று தேசிய டெங்கு ஒழிப்பு தினம். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும், அரசு நிறுவனங்கள் மாஸ் கிளினிங் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அரசு நிறுவனங்கள் தவிர, தனியார் நிறுவனங்களும் இந்த மாஸ் கிளினிங்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களை பொருத்தவரை, மாவட்ட சுகாதார துறை வாயிலாக மாஸ் கிளினிங் மேற்கொள்ளப்பட உள்ளது.

''இதன் வாயிலாக, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை ஒரே கட்டத்தில் ஒழிக்க முடியும். அதைக் கருத்தில் கொண்டே அனைவரும் இதை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us