sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'நீட்' தேர்வை 'நீட்'டாக எழுதலாம்! பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு 

/

'நீட்' தேர்வை 'நீட்'டாக எழுதலாம்! பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு 

'நீட்' தேர்வை 'நீட்'டாக எழுதலாம்! பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு 

'நீட்' தேர்வை 'நீட்'டாக எழுதலாம்! பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு 


ADDED : மே 03, 2024 12:04 AM

Google News

ADDED : மே 03, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாவட்டத்தில் நீட் பயிற்சி மேற்கொண்டு வரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இறுதி மாதிரித் தேர்வு நேற்று நடந்தது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2024 -- 2025ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட, 13 மொழிகளில் மே 5ம் தேதி நேரடி முறையில் நடக்கவுள்ளது. 2023--2024ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில் இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நீட் தேர்வை, 371க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். 250க்கும் மேற்பட்டோருக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நீட் தேர்வு நெருங்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் சி.சி.எம்.ஏ. பள்ளி, பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் பள்ளி, மேட்டுப்பாளையத்தில் ஜி.ஹெச்.ஹெச்.எஸ்., ஆண்கள் பள்ளி ஆகிய மூன்று நீட் பயிற்சி மையங்களில், இறுதி மாதிரித் தேர்வு நேற்று நடத்தப்பட்டது.

இந்த தேர்வை மொத்தம், 175 மாணவர்கள் எழுதினர்.






      Dinamalar
      Follow us