sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நீட் தேர்வு: இறுதிகட்ட பரபரப்பில் மாணவர்கள் 

/

நீட் தேர்வு: இறுதிகட்ட பரபரப்பில் மாணவர்கள் 

நீட் தேர்வு: இறுதிகட்ட பரபரப்பில் மாணவர்கள் 

நீட் தேர்வு: இறுதிகட்ட பரபரப்பில் மாணவர்கள் 


ADDED : மே 01, 2024 12:09 AM

Google News

ADDED : மே 01, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:நீட் தேர்வுக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, 2024 - 2025 ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5 ம் தேதி நேரடி முறையில் நடக்கவுள்ளது.

2023--24 ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவியருக்கு இலவச நீட் பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, மாவட்டம்தோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் சி.சி.எம்.ஏ. பள்ளி, பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் பள்ளி, மேட்டுப்பாளையத்தில் ஜி.ஹெச்.ஹெச்.எஸ். ஆண்கள் பள்ளி என மூன்று பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நீட்தேர்வினை 371க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். 250க்கும் மேற்பட்டோருக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வினை எளிதாக எழுதும் வகையில் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை இரண்டு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்வு வரும் வியாழக்கிழமை (மே 2) நடத்தப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்கள் மே 5 ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்.






      Dinamalar
      Follow us