sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நேரு கல்வி குழுமம் சார்பில் ஆதரவற்ற பெண்ணுக்கு உதவி

/

நேரு கல்வி குழுமம் சார்பில் ஆதரவற்ற பெண்ணுக்கு உதவி

நேரு கல்வி குழுமம் சார்பில் ஆதரவற்ற பெண்ணுக்கு உதவி

நேரு கல்வி குழுமம் சார்பில் ஆதரவற்ற பெண்ணுக்கு உதவி


ADDED : ஜூன் 23, 2024 12:11 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கல்விக்குழுமம் சார்பில், நேரு கலை கல்லுாரி மாணவிகள் விடுதியில், ஆதரவற்ற பெண்ணுக்கு அழகு நிலையம் அமைத்துக்கொடுத்து, தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பெற்றுள்ளது.

கொரோனா காலத்தில், கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்வாதாரத்திற்கு போராடியவர் உமா மகேஸ்வரி. இவரின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் வகையில், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில், மாணவிகள் விடுதியில் அழகு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நேரு கல்விக்குழுமங்களை சேர்ந்த மாணவிகள், இதனை பயன்படுத்திக்கொள்வார்கள். இவர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணம், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். இவரின் குழந்தைகள், நேரு சர்வதேச பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவை மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்' விழாவில் கலெக்டர் கிராந்திகுமார், அழகு நிலையத்தின் சாவியை , உமா மகேஸ்வரியிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்வில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us