sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கணக்கெடுப்பு பணி தீவிரம்

/

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கணக்கெடுப்பு பணி தீவிரம்

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கணக்கெடுப்பு பணி தீவிரம்

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கணக்கெடுப்பு பணி தீவிரம்


ADDED : மே 12, 2024 11:28 PM

Google News

ADDED : மே 12, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், எழுத படிக்க தெரியாதவர்களை கண்டறியும் பணி நேற்று துவங்கியது.

தமிழக அரசால், எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு உதவும் வகையில், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்க தெரியாத அனைவருக்கும், அடிப்படை கல்வி வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது முற்றிலும் தன்னார்வலர்களை கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், 100 சதவீதம் எழுத்தறிவை உறுதி செய்திட இத்திட்டம் அவசியமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும், மாவட்டம் வாரியாக, 15வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்க தெரியாத அனைவரையும் கண்டறியக்கூடிய விரிவான கணக்கெடுப்பு பணிகளை இந்தாண்டும் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதன்படி பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்துக்கு உட்பட்ட, 141 குடியிருப்பு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

இப்பணியில், அனைத்து கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் வாயிலாக, எழுதப்படிக்க தெரியாதவர்கள் முழுமையாக பயன்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரும், 24ம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெறும் என, ஆசிரியர் பயிற்றுநர்கள் தெரிவித்தனர். இத்திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us