sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேலையில்லாதவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் :தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் தகவல்

/

வேலையில்லாதவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் :தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் தகவல்

வேலையில்லாதவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் :தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் தகவல்

வேலையில்லாதவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் :தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் தகவல்


ADDED : ஆக 30, 2024 06:45 AM

Google News

ADDED : ஆக 30, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ''படித்து முடித்து வேலைவாய்ப்பில்லாதவர்களுக்காக புதிய திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார்,'' என, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், நான் முதல்வன் திட்டம் குறித்து, கல்லுாரி தலைவர்களுடனான மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம், பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசியதாவது:

நான் முதல்வன் திட்டம் இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டு துவங்கியுள்ளது. நாங்கள், நிறுவனங்களின் மனித வள அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்தி, தற்போது எந்த திறமைகளுக்கான தேவைகள் அதிகமாக உள்ளது என்பதை கேட்டறிந்து அதற்கு ஏற்ப பயிற்சிகள் அளித்து வருகிறோம். அனைத்து நிறுவனங்களும், தடுமாற்ற மின்றி ஆங்கிலம் பேசுபவர்களையே விரும்புகின்றன. பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசுவது தடுமாற்ற மாக உள்ளது.

அதனால், முதல் செமஸ்டரில் ஆங்கிலம் பேசுவதற்கு பயிற்சி அளிக்கிறோம். இனி, இந்த ஆங்கில பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, டிஜிட்டல் பயிற்சி அளிக்கப்படும்.

பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் மற்றும் கல்லுாரி படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்காக, புதிய திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார். நான் முதல்வன் திட்ட கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்கள், ஆன்லைன் கூட்டங்களில், 60 முதல் 65 சதவீதம் பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். நான் முதல்வன் திட்டம், 2,100 கல்லூரிகளில், 14.68 லட்சம் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் மாணவர்கள் இடைநிறுத்தம் செய்தால், அதுவும் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் பயிற்சியே எதிர்காலம். ஆன்லைன் பயிற்சி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லுாரி முதல்வர்கள், வாரத்தில் ஒரு மணி நேரமாவது, நான் முதல்வன் திட்டத்தின் கல்லுாரி ஒருங்கிணைப்பாளருடன் நேரம் செலவழிக்க வேண்டும். பல அரசு கல்லுாரிகளில் வேலைவாய்ப்பு பிரிவு என்பதே இல்லை. அதனை உருவாக்கி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்த முழு விவரங்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், நான் முதல்வன் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கல்லுாரிகளின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பாரதியார் பல்கலை துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் லவ்லீனா லிட்டில் பிளவர், அஜித்குமார் லால் மோகன், வாசுகி, பதிவாளர் (பொ) ரூபா, மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லுாரி முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us