sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நள்ளிரவில் காரை தாறுமாறாக ஓட்டிய சிறுவன் ;விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

/

நள்ளிரவில் காரை தாறுமாறாக ஓட்டிய சிறுவன் ;விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

நள்ளிரவில் காரை தாறுமாறாக ஓட்டிய சிறுவன் ;விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

நள்ளிரவில் காரை தாறுமாறாக ஓட்டிய சிறுவன் ;விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு


ADDED : ஜூலை 18, 2024 11:18 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பிளஸ் 2 மாணவன் ஒருவன் நள்ளிரவில் காரை எடுத்து சென்று விபத்தை ஏற்படுத்தியதில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சவுரிபாளையம் மகாலட்சுமி கோவில் வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்; சிமென்ட் விற்பனை 'டீலர்'. இவரது மகன் சுஜித்கண்ணா,17, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துவருகிறார். நேற்று முன்தினம் தாய், தந்தை துாங்கியவுடன் நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல் சுஜித்கண்ணா வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுத்துக்கொண்டு பீளமேடு நோக்கி சென்றார்.

பீளமேடு அருகே தனியார் வங்கி எதிரே கால் டாக்ஸி ஒன்றை 'ஓவர் டேக்' செய்ய முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அப்போது, அவிநாசி ரோடு மேம்பால பணியில்(துாண் எண்:136) ஈடுபட்டிருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அக்ஷைபெரா,23, மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தடுப்பு சுவரின்மீது மோதிய காருக்குள் இருந்து வெளியே வரமுடியாது தவித்த சிறுவனை மேம்பால பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இரும்பு கம்பியால் காரின் கதவையும், கண்ணாடியையும் உடைத்து மீட்டனர். பின்னர் கார் திடீரென தீ பற்றி எரிந்தது.

இதுதொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சிறுவன் மற்றும் அவனது தந்தை மோகன்ராஜ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். சிறுவன் காரை ஓட்டிசென்று ஒருவரது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us