sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மானிய விலையில் விதைகள், இடுபொருட்கள் வேளாண் துறை அறிவிப்பு

/

மானிய விலையில் விதைகள், இடுபொருட்கள் வேளாண் துறை அறிவிப்பு

மானிய விலையில் விதைகள், இடுபொருட்கள் வேளாண் துறை அறிவிப்பு

மானிய விலையில் விதைகள், இடுபொருட்கள் வேளாண் துறை அறிவிப்பு


ADDED : ஏப் 25, 2024 11:26 PM

Google News

ADDED : ஏப் 25, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருள்கள், 50 சதவீத மானிய விலையில் வழங்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடப்பு கோடை பருவம் மற்றும் சித்திரை பட்டத்திற்கு தேவையான நுண்ணூட்டக் கலவைகள், சூடோமோனாஸ் திரவ உயிர் உரங்கள், பயிறு வகை நிலக்கடலை மற்றும் சிறுதானிய விதைகளை மானிய விலையில், அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படுகிறது.

தற்போது தட்டைப்பயிறு, உளுந்து ஆகிய விதைகள் இருப்பில் உள்ளன. இவை மானிய விலையில் வழங்கப்படும். மேலும், 12.5 டன் மக்கிய தொழு உரங்களுடன், 2.5 கிலோ சூடோமோனாஸ் டிரைகோர்மா விரிடியினை நன்கு கலந்து, கடைசி உழவில் இடுவதால், பயிர்களை தாக்கும் அழுகல், தண்டு அழுகல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தலாம்.

விதைப்பதற்கு முன்பு, விதைகளை அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களுடன், ஆறிய அரிசி கஞ்சியினை கலந்து விதை நேர்த்தி செய்து, 30 நிமிடம் கழித்து, பின்னர் விதைக்கலாம்.

இடுபொருள்களின் இருப்பு நிலையினை உழவர் செயலியின் வாயிலாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை அலுவலர் கோமதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் விஜயகோபால் ஆகியோர் விவசாயிகளை கேட்டு கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us