ADDED : ஏப் 09, 2024 12:42 AM
அ நிறம் | அளவு
கோவை;தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் உள்ள, விதை உற்பத்தி திடல்களில் வேளாண் கண்காணிப்புக் குழுவினர் நேற்று, ஆய்வு மேற்கொண்டனர்.
விதை பயிர் நடவு முறை, பயிர் விலகு துாரம், அறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றை ஆய்வு செய்து, தரமான விதை உற்பத்திக்கு, அனைத்து விதைச்சான்று நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறினார்.
ஆய்வின்போது, பேராசிரியர் குமரேசன், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய பேராசிரியர் அய்யனார், பயிர் இனப்பெருக்கம், சிறுதானியங்கள் துறை விதைச்சான்று அலுவலர் செல்லம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
