sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எஸ்.டி.ஏ.டி., சார்பில் பயிற்சி வரும் 29ம் தேதி துவக்கம்

/

எஸ்.டி.ஏ.டி., சார்பில் பயிற்சி வரும் 29ம் தேதி துவக்கம்

எஸ்.டி.ஏ.டி., சார்பில் பயிற்சி வரும் 29ம் தேதி துவக்கம்

எஸ்.டி.ஏ.டி., சார்பில் பயிற்சி வரும் 29ம் தேதி துவக்கம்


ADDED : ஏப் 27, 2024 12:58 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில், கோடைக்கால பயிற்சி முகாம் வரும், 29ம் தேதி துவங்குகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்தாண்டுக்கான, கூடைப்பந்து, வாலிபால், ஜிம்னாஸ்டிக், தடகளம், கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு வரும் 29ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை, நேரு ஸ்டேடியம் மற்றும் நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.

இந்த முகாமில், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். தினமும் காலை, 6:00 முதல் 8:00 மணி வரையிலும், மாலை 4:30 முதல் 6:30 மணி வரையிலும், இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன.

பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்கள் ஆதார் கார்டுடன் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பயிற்சிக்கட்டணமாக ரூ. 200 ஆன்லைன் வாயிலாக வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 74017 03489, 0422 2380010 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us