ADDED : ஆக 17, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நடந்த வாகன விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.
கிணத்துக்கடவு, வடசித்தூரை சேர்ந்தவர் ராஜசேகர், 45, டெய்லர். இவர், கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பைக்கில் சென்ற போது, பின்னால் வந்த சொலவம்பாளையத்தை சேர்ந்த யுவராஜ், 19, என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், காயமடைந்த ராஜசேகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.