sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கொலை; மூவர் கைது

/

இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கொலை; மூவர் கைது

இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கொலை; மூவர் கைது

இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கொலை; மூவர் கைது


ADDED : மார் 28, 2024 11:12 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், படுகாயமடைந்த ஒருவர் இறந்தார். இதையடுத்து, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் நார் தொழிற்சாலையில் பணியாற்றும், துாத்துக்குடியை சேர்ந்த இசக்கி மாரிசெல்வம், 21, பாதாளம், 19, மற்றும் பாலமுருகன், 17, மூவரும், வேலை முடிந்து நள்ளிரவில் ரோட்டில் நடந்து சென்றனர்.

அதே பகுதியில் 'ரியல் எஸ்டேட்' தொழில் செய்யும், கரூரை சேர்ந்த சதாம்உசேன், 29, மற்றும் மணிமாறன், 32, ஆகியோர் எதிரில் வந்தனர். அப்போது, சதாம்உசேன் மற்றும் மணிமாறன் இருவரும், எதிரில் வந்த மூவரையும் பார்த்து, 'இந்த நேரத்தில் எங்கு செல்கிறீர்கள்' என கேட்டுள்ளனர்.

இதனால், இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில், கோபமடைந்த துாத்துக்குடியை சேர்ந்த மூவரும், சதாம்உசேன், மணிமாறனை இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயம் அடைந்த இருவரையும், அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையிக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மூவரையும், போலீசார் கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மணிமாறன் நேற்று இறந்தார். இதை தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us