/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24 மணி நேர குடிநீர் பணி ;விரைந்து முடிக்க உத்தரவு
/
24 மணி நேர குடிநீர் பணி ;விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : மே 10, 2024 01:56 AM
கோவை:மாநகராட்சி பகுதிகளில் நடந்துவரும், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மண்டலம், கிக்கானி பள்ளி அருகே, காந்திபுரம்,49வது வார்டு பொன்னேரி நகர், கிழக்கு மண்டலம், 44வது வார்டு லட்சுமி மில், மசக்காளிபாளையம், சின்னசாமி லே-அவுட் ஆகிய இடங்களில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார். வ.உ.சி., பூங்கா அருகே கட்டப்பட்டு வரும், 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிபணிகளையும் விரைந்து முடிக்குமாறு, அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி கமிஷனர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.