/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பால விநாயகர் கோவில் உண்டியல் உடைப்பு
/
பால விநாயகர் கோவில் உண்டியல் உடைப்பு
ADDED : ஜூன் 04, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்:போத்தனூரிலிருந்து மேட் டூர் செல்லும் சாலையில் பால விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு பூசாரி ராமகிருஷ்ணன் கோவில் நடையை பூட்டிச்சென்றார்.
நேற்று காலை, 6:30 மணிக்கு கோவிலுக்கு வந்த பூசாரி நடை திறந்திருப்பதை கண்டார். உள்ளே சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு, பக்தர்களால் போடப்பட்ட சுமார் நான்காயிரம் ரூபாய் காணிக்கை திருடப்பட்டிருப்பது தெரிந்தது. சுந்தராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.