ADDED : மே 09, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
கோவை: ஈரோடு–திருப்பூர் இடைப்பட்ட ஊத்துக்குளி ஸ்டேஷன் அருகே ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணி நடக்கிறது.
இதனால் வரும் 12ம் தேதி கோவை வழி திருச்சி–பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில்(16843) இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மதியம் 1:00க்கு புறப்படும் இந்த ரயில், ஈரோடு அருகே ஈங்கூர் வரை இயக்கப்படும். பணிகள் முடிந்த பின் ஈங்கூரில் இருந்து பாலக்காடு டவுனிற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என, ரயில்வே தெரிவித்துள்ளது.
