sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சூலுார் குழந்தைக்கு அரிய நோய் சிகிச்சைக்கு உதவ பெற்றோர் மனு

/

சூலுார் குழந்தைக்கு அரிய நோய் சிகிச்சைக்கு உதவ பெற்றோர் மனு

சூலுார் குழந்தைக்கு அரிய நோய் சிகிச்சைக்கு உதவ பெற்றோர் மனு

சூலுார் குழந்தைக்கு அரிய நோய் சிகிச்சைக்கு உதவ பெற்றோர் மனு


ADDED : ஜூலை 02, 2024 01:08 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;சூலுாரை சேர்ந்த தம்பதியர், தங்கள் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள, 'ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி' நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள, கலெக்டரிடம் உதவி கேட்டனர்.

சூலூரை சேர்ந்த சுரேஷ்குமார் - நித்யா தேவி தம்பதியரின் இரண்டு வயது குழந்தையால், இன்னும் எழுந்து நடக்க முடியவில்லை. மரபணு சோதனை முடிவில், ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி (முதுகெலும்பு தசை சிதைவு நோய்) இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நோய் மிக அரிதானது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்திலிருந்து மருந்து இறக்குமதி செய்து சிகிச்சை அளிப்பதாக, டாக்டர்கள் கூறுகின்றனர்.

இச்சிகிச்சைக்கு சுமார், 16 கோடி ரூபாய் தேவைப்படும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இத்தொகை எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு, பெற்றோர் தெரிவித்தனர்.

உதவ விரும்பும் நல்லுள்ளம் படைத்தோர், 97883 56356, 86680 99910 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us