/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சி
/
பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சி
ADDED : மே 09, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில், வாணவராயர் வேளாண்மை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகளான சஹானா, அஜிதா, தனலெஷ்மி, இனியாழ், லதர்ஷ்ணி, தாரணி, சுபப்பிரபா, கார்த்திகா தேவதாஸ் மவுனிகா, பிரித்திகா ஆகியோர் 'கிராம தங்கல் திட்டத்தின்' ஒரு பகுதியாக 'பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு' நிகழ்ச்சியை நடத்தனர்.
அப்பகுதி மக்களுக்கு கிராமத்தின் வரைபடம், பயிர்களின் வட்ட வரைபடம், மக்கள் தொகை கணக்கு, படித்தவர்களின் எண்ணிக்கை, விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை, விவசாயம் அல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை, சமுதாய வரைபடம் போன்றவற்றை வரைந்து விளக்கம் அளித்தனர்.