/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் பயணியர் தவிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் பயணியர் தவிப்பு
ADDED : ஏப் 11, 2024 12:47 AM
உடுமலை :' உடுமலை பஸ் ஸ்டாண்டில், இருக்கை வசதி உட்பட அடிப்படை வசதிகளின்றி பயணியர் தவிக்கின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்கு செல்ல வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால், கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
குறிப்பாக, பயணியர் அமர போதிய இருக்கைகைள் இல்லை. இதனால், பஸ்சுக்காக பயணியர் நீண்ட நேரம் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. மேலும், திருப்பூர் பஸ்கள் நிற்குமிடத்தில், பயணியர் காத்திருக்கும் இடங்களில் சிறு, சிறு கடைகள் போடப்பட்டுள்ளன.
இவை பயணியருக்கு இடையூறாக இருக்கிறது. மேலும் பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே குப்பை, கழிவுகளும் நிறைந்து காணப்படுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் பயணியருக்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

