sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விளையாட்டு உபகரணங்கள் வீணாவதால் மக்கள் அதிருப்தி

/

விளையாட்டு உபகரணங்கள் வீணாவதால் மக்கள் அதிருப்தி

விளையாட்டு உபகரணங்கள் வீணாவதால் மக்கள் அதிருப்தி

விளையாட்டு உபகரணங்கள் வீணாவதால் மக்கள் அதிருப்தி


ADDED : மார் 07, 2025 08:21 PM

Google News

ADDED : மார் 07, 2025 08:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவு, சூலக்கல் பகுதியில் கோவில் எதிரே உள்ள விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

கிணத்துக்கடவு, சூலக்கல் ஊராட்சி மாரியம்மன் கோவில் எதிரே உள்ள விளையாட்டு திடலில், குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் துருப்பிடித்தும், உபயோகப்படுத்த முடியாத நிலையிலும் உள்ளன.

ஊஞ்சலில் வெறும் கம்பங்கள் மட்டுமே உள்ளது. குழந்தைகள் சறுக்கி விளையாடும் உபகரணதில், உரிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் குழந்தைகள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு திடல் அருகே, மேல்நிலை தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் அருகாமையில் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்த இடம், கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யும் பகுதியாக மாறி வருகிறது. இதை சரி செய்ய, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குழந்தைகள் விளையாட இந்த விளையாட்டு திடலை மேம்படுத்த வேண்டும்.

குப்பை கொட்டாமல் இருக்க குப்பை தொட்டி அமைக்க வேண்டும். இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும். விளையாட்டு திடலுக்கு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us