sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேராசையால் பணத்தை இழக்கும் கோவை மக்கள்:  நடப்பாண்டில் ரூ. 73 கோடி ஆன்லைன் மோசடி உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை 

/

பேராசையால் பணத்தை இழக்கும் கோவை மக்கள்:  நடப்பாண்டில் ரூ. 73 கோடி ஆன்லைன் மோசடி உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை 

பேராசையால் பணத்தை இழக்கும் கோவை மக்கள்:  நடப்பாண்டில் ரூ. 73 கோடி ஆன்லைன் மோசடி உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை 

பேராசையால் பணத்தை இழக்கும் கோவை மக்கள்:  நடப்பாண்டில் ரூ. 73 கோடி ஆன்லைன் மோசடி உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை 


ADDED : ஆக 30, 2024 10:21 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;இந்தாண்டு துவக்கம் முதல் ஆக., மாதம் வரை 73 கோடி ரூபாயை கோவை மக்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.

சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், ஆன்லைன் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வி.பி.என்., பயன்படுத்தி தாங்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்த முடியாதவாறு மோசடியில் ஈடுபடுவதால் போலீசாருக்கும் சவாலாக அமைகிறது. இணைய வழியில் பலர் தங்களின் பணத்தை இழக்கின்றனர்.

படிப்பறிவு, விழிப்புணர்வு இல்லாதவர்களிடம், 'ஏ.டி.எம்., கார்டு புதுபிக்க வேண்டும், கார்டு மேல் இருக்கும் 16 டிஜிட் நம்பர் சொல்லுங்கள்' என வடமாநிலத்தவர்கள் மோசடியில் ஈடுபட்டனர்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடி நபர்களும் ஆன்லைன் டிரேடிங், பெடெக்ஸ் என புது புது மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். சைபர் கிரைம் குறித்து போலீசார் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பலரின் பேராசை அவர்களை மோசடி வலையில் சிக்க வைக்கிறது.

இந்நிலையில், கோவையை சேர்ந்த பலரிடம் ஆன்லைன் மோசடி கும்பல் பல கோடி ரூபாயை பறித்திருப்பது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஐ.டி., நிறுவன ஊழியரிடம் 1.63 கோடி ரூபாய் மோசடி செய்தனர். அதேபோல், ராமநாதபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம், சட்ட விரோத பார்சல் வந்துள்ளதாக கூறி, சுமார், ரூ. 2.3 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

கோவையில் கடந்த ஜன., முதல் ஆக., 26ம் தேதி வரை ( எட்டு மாதங்களில்) சுமார், 73 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. மொத்தம், 5319 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 217 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு, 31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆறு குற்றவாளிகள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. சுமார் எட்டு கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த எட்டு மாதங்களின் ஒன்றறை மடங்கு அதிகரித்துள்ளது.

இதுவே, 2021ம் ஆண்டு ரூ. 2.99 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது, 2251 புகார்கள் பெறப்பட்டுள்ளன, 44 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. 2022ம் ஆண்டு சுமார் 4516 புகார்கள் பெறப்பட்டன, அதில் 13.87 கோடி ரூபாய் மேசாடி நடந்தள்ளது. 68 எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளது. 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 81 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு, 48 கோடியே 32 லட்சத்துது, 27 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. 6396 புகார்கள் வந்ததில் 206 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. 44 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு பேர் குண்டாசில் அடைக்கப்பட்டுள்ளனர். ரூ. 2.24 கோடி மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் நடந்த மோசடியை ஒப்பிடுகையில் ஒவ்வொரு ஆண்டம் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மேலும், மோசடிகளில் சிக்குவோர் பெரும்பாலும் படித்தவர்கள், ஐ.டி., உள்ளிட்ட துறைகளில் பணிபுரிவோர், மூத்த குடிமக்கள் ஆவர்.

சைபர் கிரைம் மோசடியை பொருத்தவரை குற்றவாளியை கண்டுபிடிப்பதும், அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டெடுப்பதும் போலீசாருக்கு மிகவும் சவாலாக உள்ளது. மேலும், போலீசார் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், பொது மக்களின் தங்களின் பேராசையால் பெரும் நஷ்டத்தை அடைகின்றனர்.

இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டும் கும்பலிடம் இருந்து மக்கள் தங்கள் பணத்தை பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், உங்கள் பெயிரில் சட்ட விரோத பார்சல் வந்துள்ளது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து பணம் அனுப்ப கேட்டால் பயப்படாமல் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும், சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது cybercrime.gov.in என்ற இணைய தளம் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.

போலீசாரை நம்புங்கள்

கோவை பாப்பநாயக்கன் பாளையத்ததை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர், 20 நாட்களுக்கு ஆன்லைன் முதலீட்டில் 10 லட்சத்தை இழந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சைபர் கிரைம் போலீசார், மோசடி பற்றி மணிக்கணக்கில் விளக்கினர். இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி அனுப்பினர். தொடர்ந்து, இவரை அனுகிய மோடி கும்பல், மேலும், 14 லட்சம் ரூபாய் கொடுத்தால் பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பி மீண்டும் 14 லட்சத்தை இழந்துள்ளார். போலீசாரின் அறிவுறுத்தலை பின்பற்றி, அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு இது போன்ற போலியான நபர்களிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us