sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒரு கி.மீ.,க்கு ரோட்டை சீரமைக்க 10 ஆண்டுகளாக போராடும் மக்கள்

/

ஒரு கி.மீ.,க்கு ரோட்டை சீரமைக்க 10 ஆண்டுகளாக போராடும் மக்கள்

ஒரு கி.மீ.,க்கு ரோட்டை சீரமைக்க 10 ஆண்டுகளாக போராடும் மக்கள்

ஒரு கி.மீ.,க்கு ரோட்டை சீரமைக்க 10 ஆண்டுகளாக போராடும் மக்கள்


ADDED : ஜூலை 14, 2024 05:38 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 05:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:

ரோடு சீரமைக்க கோரி, வால்பாறை, சோலையாறு டேம் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு டேம். இங்கிருந்து ேஷக்கல்முடி செல்லும் ரோட்டில் மின்வாரியத்திற்கு சொந்தமான ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோடு, கடந்த, 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதனால், இந்த ரோட்டில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், 'சோலையாறு டேம் பஜாரை ஒட்டியுள்ள, ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோட்டை சீரமைக்க கோரி வார்டு கவுன்சிலர் முதல், அமைச்சர் வரை அனைவரிடமும் மனு கொடுத்துள்ளோம். கரடு, முரடான இந்த ரோட்டை யாரும் சீரமைக்கவில்லை.

மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதில், நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றனர்,' என்றனர்.

வால்பாறை நகராட்சி, 8வது வார்டு கவுன்சிலர் இந்துமதியிடம் கேட்ட போது, ''சோலையாறுடேம் பஜார் பகுதியில் உள்ள ரோட்டை சீரமைக்க, மாவட்ட கலெக்டர் வாயிலாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மின்வாரியத்துக்கு சொந்தமான ரோட்டை முறைப்படி அவர்கள் நகராட்சி வசம் ஒப்படைக்கவில்லை. ரோட்டை ஒப்படைத்தவுடன், பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக ரோடு சீரமைக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us