/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்பாடால் மக்கள் அவதி
/
கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்பாடால் மக்கள் அவதி
ADDED : ஏப் 29, 2024 09:20 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பெரும்பாலான நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, தனிநபர் சுப நிகழ்ச்சிகளிலும், ஐகோர்ட் உத்தரவை மீறி, கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, ரோட்டை ஒட்டிய மின் கம்பங்களில் அவை பொருத்தப்பட்டு, 45 டெசிபலுக்கு அதிகமான சப்தத்தில் பாடல் ஒலிக்கச் செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், வணிகக் கடைக்காரர்கள் என, பலரும் பாதிக்கின்றனர்.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'மத வழிபாட்டு தலங்கள், விழாக்கால பொறுப்பாளர்கள் ஒவ்வொரும் தங்கள் செயல்பாடுகளை மிகைப்படுத்தி காட்ட இதுபோன்ற அதீத செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இதனால், குழந்தைகள், முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாதிக்கின்றனர். போலீசார், அவ்வப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டு, இதை தடுக்க வேண்டும்,' என்றனர்.

