/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிழற்கூரையின்றி மக்கள் தவிப்பு
/
நிழற்கூரையின்றி மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 26, 2024 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை வெஞ்சமடையில், நிழற்கூரை இல்லாததால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை -பழநி ரோட்டில் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்தன. அப்போது வெஞ்சடையில் இருந்த நிழற்கூரை அகற்றப்பட்டது. பணிகள் முடிந்த பின் மீண்டும் நிழற்கூரை அமைக்கப்படவில்லை.
இதனால், அங்குள்ள பஸ் நிறுத்தத்தில், பயணியர் வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் வெஞ்சமடையில் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.