/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்
/
கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 01, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலையிலிருந்து கிராமங்களுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலைக்கு பல்வேறு பணிகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கிராமங்களிலிருந்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் வருகின்றனர்.
ஆனால், இங்கிருந்து தொலைதுார கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்து.
எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

