/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெரியாறு அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்வு
/
பெரியாறு அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்வு
ADDED : மே 27, 2024 02:18 AM
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்ந்து 118.95 அடியானது.
இந்த அணையின் நீர்ப்பிடிப்பில் 2023 டிசம்பரில் பெய்த மழைக்குப்பின் கடந்த நான்கு மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவியதால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் 4 மாதங்களுக்குப் பின் நீர்ப்பிடிப்பில் மே 1ல் மழை துவங்கியது.
கடந்த ஒரு வாரமாக மழை தீவிரமடைந்தது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2084 கன அடியாக அதிகரித்தது.
மே 24 ல் 116.95 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 118.95 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 152 அடி). கடந்த 3 நாட்களில் 2 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2357 மில்லியன் கன அடியாகும்.

