sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்க அனுமதி

/

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்க அனுமதி

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்க அனுமதி

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்க அனுமதி


ADDED : செப் 15, 2024 11:57 PM

Google News

ADDED : செப் 15, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட, 254 சக்கர நாற்காலிகளை, கோவை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு வழங்க மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த, 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில், ஓட்டுப்பதிவுக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, கோவை மாநகராட்சி சார்பில், 100 இரு சக்கர தள்ளுவண்டிகள் வாங்கப்பட்டன. அவை, ராம்நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 54 தள்ளுவண்டிகளே தற்போது பயன்படுத்தும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவை பழுதடைந்திருக்கின்றன.

இதேபோல், இவ்வாண்டு நடந்த லோக்சபா தேர்தல் பயன்பாட்டுக்கு, 200 இரு சக்கர தள்ளுவண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டன. இவை, சித்தாபுதுார் பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அடுத்த தேர்தலுக்கு பயன்படுத்தலாம் என வைத்திருந்தால், பழுதடைந்து வீணாகி விடும். அதனால், மருத்துவமனைகளுக்கு பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டது,

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 64 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், 3 பொது சுகாதார ஆய்வகங்கள், 5 மருந்தகங்கள், 5 வீடற்றோர் தங்கும் விடுதிகள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறைக்கு தேவைப்படும் எண்ணிக்கையில பிரித்து வழங்கினால், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். இவற்றை வழங்க, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us