sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாக்கடை கட்டி கொடுங்க  மனு கொடுத்து வலியுறுத்தல் 

/

சாக்கடை கட்டி கொடுங்க  மனு கொடுத்து வலியுறுத்தல் 

சாக்கடை கட்டி கொடுங்க  மனு கொடுத்து வலியுறுத்தல் 

சாக்கடை கட்டி கொடுங்க  மனு கொடுத்து வலியுறுத்தல் 


ADDED : மார் 11, 2025 04:17 AM

Google News

ADDED : மார் 11, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி,: பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில், சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரிடம், பா.ஜ., தெற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் கவுதம் லிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி, சிஞ்சுவாடி ஊராட்சிக்கு உட்பட்ட தேவநல்லுாரில், ஆதிதிராவிடர், 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். வீடுகளில் இருந்து கழிவுநீர் முறையாக வெளியேற வசதி இல்லாமல், ஊருக்கு அருகே புளியமரத்தடியில் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடுகள் உள்ளது.

இதன் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் படிக்கின்றனர். மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாய் கட்டி, கழிவுநீர் முறையாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us