sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பி.எப்., சந்தாதாரர்கள் குறை தீர்ப்பு கூட்டம்

/

பி.எப்., சந்தாதாரர்கள் குறை தீர்ப்பு கூட்டம்

பி.எப்., சந்தாதாரர்கள் குறை தீர்ப்பு கூட்டம்

பி.எப்., சந்தாதாரர்கள் குறை தீர்ப்பு கூட்டம்


ADDED : ஜூன் 22, 2024 11:47 PM

Google News

ADDED : ஜூன் 22, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து, சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில், 'நிதி ஆப்கே நிகட்' (Nidhi Aapke Nikat) என்ற பெயரில், குறை தீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், வரும் 27ம் தேதி இந்த குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் உள்ள, பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், சோலையார் அணை ஷேக்கல்முடி எஸ்டேட்டிலும், திருப்பூர் முதலிபாளையம், டி.இ.கே.ஐ.சி.,டி நகர், சிட்கோ, காட்டன் பிளாசம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும், நீலகிரியில் ஊட்டி ேசரிங் கிராஸில் உள்ள தோட்டக்கலை வளாகத்திலும், இந்த குறை தீர்ப்பு கூட்டம் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் குறைகள் மற்றும் பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், காலை 10:30 முதல் 12:30 மணி வரை, தங்களுக்கு அருகிலுள்ள இடத்தில் நேரில் முறையிடலாம்.

உறுப்பினர், ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களின் யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் கொண்டு வருவது அவசியம். பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த தகவலை, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் -வைபவ் சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us