sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காரில் வந்து பிக்பாக்கெட், நகை திருட்டு: 4 பேர் கும்பல் சிக்கியது; 20 பவுன் மீட்பு

/

காரில் வந்து பிக்பாக்கெட், நகை திருட்டு: 4 பேர் கும்பல் சிக்கியது; 20 பவுன் மீட்பு

காரில் வந்து பிக்பாக்கெட், நகை திருட்டு: 4 பேர் கும்பல் சிக்கியது; 20 பவுன் மீட்பு

காரில் வந்து பிக்பாக்கெட், நகை திருட்டு: 4 பேர் கும்பல் சிக்கியது; 20 பவுன் மீட்பு


ADDED : ஜூலை 07, 2024 10:21 PM

Google News

ADDED : ஜூலை 07, 2024 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:காரில் வலம் வந்து பிக்பாக்கெட் மற்றும் நகைகளை திருடிய, 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 20 பவுன் நகைகளை மீட்டனர்.

கோவை ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, ரயில்வே ஸ்டேஷன், டவுன்ஹால் உட்பட பகுதிகளில் பிக்பாக்கெட், பஸ்களில் நகை திருட்டு நடப்பதாக, தொடர் புகார்கள் வந்தன. இதேபோல மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு வாலிபரின் பையை பிளேடால் கிழித்து, 11 பவுன் நகை திருட்டு போனதாக புகார் வந்தது.

போலீஸ் துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சசிகலா, பிராங்க்ளின், எஸ்.ஐ.,க்கள் மாரிமுத்து, உமா, போலீசார் கார்த்திக், பூபதி, கில்பட் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் சாதாரண உடையில், பல்வேறு இடங்களில் ரோந்து சென்று கண்காணித்தனர். பல பிக்பாக்கெட் திருடர்களிடம் நடத்திய விசாரணையில், புதிதாக ஒரு கும்பல் வந்திருப்பதாக தெரிவித்தனர்.

போலீசார் பஸ், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி, திருடர்களை தேடி வந்தனர். அப்போது திருடர்கள் மருதமலை பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது.

வனப்பகுதியில் காரில் துாங்கிக் கொண்டு இருந்த, 4 பேர் கும்பலை போலீசார் இரவில் சுற்றிவளைத்து பிடித்தனர். வடவள்ளி போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கமல், 42, காமராஜபுரத்தை சேர்ந்த பிரசாந்த் என்கிற கிரி, 30, ரத்தினபுரியை சேர்ந்த ரமேஷ், 48, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த கோழி ராஜன், 40 என்பது தெரிந்தது.

அவர்களிடம் இருந்து, 20 பவுன் தங்க நகைகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணைக்குப் பின், போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இவர்கள், காரில் ஏதாவது ஒரு பஸ் நிறுத்தத்திற்கு சென்று அங்கு காரை நிறுத்தி, பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் பர்ஸ், நகைகளை திருடி, தப்பி விடுவார்கள்.

அதிக கூட்டம் உள்ள பஸ்களில் திருட்டில் ஈடுபடுவார்கள். கோழி ராஜா பஸ்சின் பின்னால் சென்று, திருடர்களை கூட்டிச்சென்று விடுவார். திருடும் நகைகளை, கோழி ராஜா விற்று பணமாக்கி பகிர்ந்து கொடுத்துள்ளார்.

திருட்டு பணத்தில், 4 பேரும் மது, நட்சத்திர ஓட்டல், சீட்டாட்டம் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளனர். விடுமுறை நாட்களில், வடமாநில தொழிலாளர்களே பொது இடங்களுக்கு வருவார்கள் என்பதாலும், அவர்களிடம் திருடினால் போலீசில் புகார் அளிக்கமாட்டார்கள் என்பதாலும், விடுமுறை நாட்களில் அவர்களிடம் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்களிடமும் திருடி உள்ளனர். காரில் வந்து திருடி சென்றால் போலீசில் சிக்க மாட்டோம் என நினைத்து இருந்தார்கள். ஆனால் வசமாக சிக்கி விட்டனர். மேலும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட கமல், பிரசாந்த் ரமேஷ், கோழி ராஜன் ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us