sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அமித்ஷாவை வரவேற்க வைத்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்; சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர்

/

அமித்ஷாவை வரவேற்க வைத்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்; சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர்

அமித்ஷாவை வரவேற்க வைத்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்; சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர்

அமித்ஷாவை வரவேற்க வைத்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்; சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர்


ADDED : பிப் 26, 2025 04:10 AM

Google News

ADDED : பிப் 26, 2025 04:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; நேற்று கோவை வந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க, வைத்திருந்த பிளக்ஸ் போர்டுகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதால், பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை, ஈஷா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கோவை வந்தார்.

அவரை வரவேற்பதற்காக, பா.ஜ.,வினர் கோவை விமான நிலையத்தில் இருந்து, அவிநாசி சாலையோரம் முழுவதும் வரிசையாக பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்தனர்.

இந்நிலையில், பிளக்ஸ் போர்டுகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். பா.ஜ.,வினர் ஆத்திரமடைந்தனர். பிளக்ஸ் போர்டுகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர், பீளமேடு போலீஸ் நிலையம் முன், அவிநாசி சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், சுமார் 10 நிமிடத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்து கலைந்தனர்.






      Dinamalar
      Follow us