sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோதவாடி ஊராட்சியில் மரக்கன்றுகள்  நடவு 

/

கோதவாடி ஊராட்சியில் மரக்கன்றுகள்  நடவு 

கோதவாடி ஊராட்சியில் மரக்கன்றுகள்  நடவு 

கோதவாடி ஊராட்சியில் மரக்கன்றுகள்  நடவு 


ADDED : ஆக 04, 2024 10:05 PM

Google News

ADDED : ஆக 04, 2024 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே, கோதவாடியில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் ரோட்டோரத்தில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பவை மரங்கள். மரக்கன்றுகள் நட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இது சம்பந்தமாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுபோட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. கோதவாடியில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் ரோட்டோரத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சித் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். பி.டி.ஓ., விஜயகுமார் முன்னிலை வகித்தார். துாய்மைப் பணியாளர்கள், ஒரு கி.மீ., துாரத்திற்கு, குறிப்பிட்ட இடைவெளியில், புங்கன், வேம்பு என, 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

ஊராட்சி அலுவலகத்தில், பல்வேறு வகையான மரக்கன்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மரக்கன்று நடவில் விருப்பம் உள்ளவர்கள் வாங்கிச் செல்லலாம், என, தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us