sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஐந்து ஏக்கரில் மரக்கன்றுகள் நடவு

/

ஐந்து ஏக்கரில் மரக்கன்றுகள் நடவு

ஐந்து ஏக்கரில் மரக்கன்றுகள் நடவு

ஐந்து ஏக்கரில் மரக்கன்றுகள் நடவு


ADDED : ஜூன் 06, 2024 11:23 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், கோவை வனத்துறை, நிறை தொண்டு நிறுவனம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

கிட்டாம்பாளையத்தில் உள்ள 'சி போர்ஸ்' நிறுவன வளாகத்தில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நிறுவன அதிகாரிகள் வினோத் சங்கர், திருமூர்த்தி, கோவை வனக்கோட்டம் வனவியல் விரிவாக்க சரக அதிகாரி பிரியா, ஊராட்சி தலைவர் சந்திரசேகர், நிறை தொண்டு நிறுவன அதிகாரி பரமேஸ்வரி மற்றும் பணியாளர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

வனத்துறை அதிகாரி பிரியா பேசுகையில்,'ஆண்டில் ஒரு நாள் மட்டும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவதை தவிர்த்து, ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் தினம் என, மனதில் கொண்டு மரக் கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்து கொள்ள ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும். மரக்கன்றுகள் நடவு செய்ய முன் வருவோருக்கு, வனவியல் விரிவாக்க சரகம் சார்பில் மரக்கன்றுகளை வழங்க தயாராக உள்ளோம்,' என்றார்.






      Dinamalar
      Follow us