sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகை ஒப்படைத்த ஊழியருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

/

நகை ஒப்படைத்த ஊழியருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

நகை ஒப்படைத்த ஊழியருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

நகை ஒப்படைத்த ஊழியருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு


ADDED : மே 10, 2024 02:07 AM

Google News

ADDED : மே 10, 2024 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை ராம் நகரில் விஜய் பார்க் இன் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூருவை சேர்ந்த தம்பதி, அறை எடுத்து தங்கினர். அவர்கள் தங்களது, 100 கிராம் தங்க நகையை, அறையில் தவறவிட்டு சொந்த ஊர் திரும்பினர்.

இந்நிலையில், ஓட்டல் ஊழியர் அசாமை சேர்ந்த சஞ்ஜூ டோலே, 20, அறையில் இருந்த துணிகளை சுத்தம் செய்தார். அப்போது துணிக்குள் இருந்த நகையை பார்த்துள்ளார். உடனே அவர் அதை ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கொடுத்துள்ளார்.

ஓட்டல் நிர்வாகம் விசாரித்து, பெங்களூரு தம்பதியை நேரில் வரவழைத்து, நகையை ஒப்படைத்தனர். இந்த தகவலை அறிந்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ஓட்டல் ஊழியர் சஞ்ஜூ டோலேவை நேரில் வரவழைத்து பாராட்டி கவுரவித்தார்.






      Dinamalar
      Follow us