sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ் ஸ்டாண்டுகளில் வாகனங்கள்; அபராதம் விதிக்க போலீசார் முடிவு

/

பஸ் ஸ்டாண்டுகளில் வாகனங்கள்; அபராதம் விதிக்க போலீசார் முடிவு

பஸ் ஸ்டாண்டுகளில் வாகனங்கள்; அபராதம் விதிக்க போலீசார் முடிவு

பஸ் ஸ்டாண்டுகளில் வாகனங்கள்; அபராதம் விதிக்க போலீசார் முடிவு


ADDED : மார் 04, 2025 06:13 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, சின்கோனா, ேஷக்கல்முடி, முடீஸ், சோலையாறுடேம் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து அக்காமலை, வெள்ளமலை வழியாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த இரண்டு பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் சுற்றுலா வாகனங்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால், எஸ்டேட் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக, இருசக்கர வாகனங்கள், டூரிஸ்ட் வேன்கள் விதிமுறையை மீறி, பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில்,'வால்பாறை நகரில் உள்ள பஸ் ஸ்டாண்டு பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது. தடையை மீறி வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us