
கசகசா பாயசம் என்பது கசகசா மற்றும் தேங்காய் சேர்த்துச் செய்யப்படும் ஒரு வித்தியாசமான சுவையான பாயாசம் ஆகும். கசகசா சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும். ஆகையால் இதனை கோடைக்காலத்தில் அடிக்கடி செய்து சாப்பிடுவது நல்லது.
செய்முறை: முதலில் பச்சரி மற்றும் கசகசாவை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீரை ஊற்றி, வெல்லத்தை முற்றிலும் உருக வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு வெல்லப் பாகை அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கட்டிகளின்றி நன்கு கிளறி, 10- முதல் 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த நேரத்தில் பாயாசமானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் சேர்க்கவும். இதனுடன், ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால், சுவையான கசகசா பாயாசம் தயார்.
பாயாசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், அத்துடன் காய்ச்சிய பாலை தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு இனிப்பு எப்படி வேண்டுமோ அந்தளவிற்கு வெல்லத்தை கூட்டி, குறைத்துக்கொள்ளலாம்.