/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் குறைதீர்ப்பு கூட்டம்; 17க்குள் அனுப்ப மறக்காதீங்க
/
தபால் குறைதீர்ப்பு கூட்டம்; 17க்குள் அனுப்ப மறக்காதீங்க
தபால் குறைதீர்ப்பு கூட்டம்; 17க்குள் அனுப்ப மறக்காதீங்க
தபால் குறைதீர்ப்பு கூட்டம்; 17க்குள் அனுப்ப மறக்காதீங்க
ADDED : மார் 12, 2025 11:32 PM
கோவை; இம்மாதம் தபால் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கவுள்ளதால், வாடிக்கையாளர்கள், தபால் சார்ந்த குறைகளை, வரும் 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது.
மண்டல அளவிலான தபால் குறைதீர்ப்பு கூட்டம், இம்மாதம், 'அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி., காலனி தபால் நிலைய வளாகம், கோவை - 641030' அலுவலகத்தில் நடக்கவுள்ளதாகவும், இதன் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது புகாரை, துணை இயக்குனர் (Mails & Tech) அஞ்சல் துறை அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி., காலனி தபால் நிலையம் வளாகம், கோவை 641030' என்ற முகவரிக்கு, வரும் 17ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தின் மேலுறையில் 'தபால் குறை தீர்ப்பு கூட்ட புகார்' என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில், தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநர் மற்றும் பெறுநர் முழு முகவரி, தபால் பதிவு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
அஞ்சலக சேமிப்பு கணக்கு, காப்பீடு தொடர்பான புகார்களில், சேமிப்பு கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளர் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர், பணப்பிடித்தம் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என, மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.