/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு
/
கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு
ADDED : ஜூலை 03, 2024 09:35 PM

பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சேரன் தொழிலாளர் காலனி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல, சவுண்டம்மன், மாகாளியம்மன் கோவில்களில், சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும், சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட வழிபாடு நடந்தது.
உடுமலை: பிரதோஷத்தை முன்னிட்டு, உடுமலை, தில்லை நகர் ரத்னலிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிகளுக்கு, பால், பன்னீர் உட்பட 16 வகையான திரவியங்களில் அபிேஷகம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. நந்தி சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடந்தது.
பிரசன்ன விநாயகர் கோவில் காசி விஸ்வநாதர் சுவாமிகளுக்கும், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வர் கோவில், ருத்ரப்ப நகர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், மடத்துக்குளம், கொழுமம், தாண்டேஸ்வரர் கோவில், கடத்துார் அர்ச்சுணேஸ்வரர் கோவில்களில் சிறப்பு அபிேஷகத்துடன் அலங்கார பூஜை நடந்தது.
- நிருபர் குழு -