sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

/

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு


ADDED : ஜூலை 16, 2024 02:16 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின், 122வது பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

* கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் வழங்கினார். கடந்த ஆண்டு கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

* சின்னேரிபாளையம் சுவஸ்திக் பள்ளியில், தாளாளர் தீபாகாந்தி தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியர் மோகன்ராஜ், காமராஜர் கல்வித்துறையில் செய்த மாற்றங்கள் பற்றி விளக்கினார். பாடல், கவிதை, ஓவியம்,கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள், காமராஜர் வேடம் அணிந்தனர்.

* கோடங்கிப்பட்டி தொடக்கப்பள்ளியில், காமராஜரின் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சத்தியா, விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

* ரமணமுதலிபுதுார் தொடக்கப்பள்ளியில், ஊராட்சி துணை தலைவர் திலகவதி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அழகேஸ்வரி வரவேற்றார்.காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளின் புகைப்படங்கள், அதன் விபரங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். உதவியாசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.

* தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.காமராஜரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

* மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தாளாளர் அப்புகுட்டி பங்கேற்றார். கடந்த ஆண்டில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

* ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் கிட்டுச்சாமி வரவேற்றார். பள்ளி செயலர் ரங்கசாமி தலைமை வகித்தார். காமராஜர் சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது.

* ஆர்.பொன்னாபுரம் நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் பாரிஸ்பேகம் தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சண்முகசுந்தரம் வரவேற்றார். போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

வால்பாறை


* வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், காமராஜர் படத்துக்கு, தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் மாலை அணிவித்தார். காமராஜரின் சாதனைகள் குறித்தும், அவரது வாழ்க்கை வரலாறு குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

* முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமை வகித்தார். பள்ளிக்கல்விக்குழு செயலாளர் ஜான்சன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

* நல்லகாத்து துவக்கப்பள்ளியில், காமராஜர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமார் பரிசு வழங்கினார்.

* வால்பாறை காங், கட்சி சார்பில் நடந்த விழாவில், நகர காங்,., தலைவர் அமீர் தலைமை வகித்தார். காமராஜர் சிலைக்கு மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா மாலை அணிவித்தார். சிறுபான்மைப்பிரிவு செயல்தலைவர் சந்திரசேகர், சட்டசபை தொகுதி தலைவர் ஈஸ்டர்ராஜா பங்கேற்றனர்.

கிணத்துக்கடவு


* கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் ஜெயந்தி, காமராஜர் வாழ்க்கை வரலாறு பற்றி பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

* மெட்டுவாவி நடுநிலைப்பள்ளியில், கவிதை, கட்டுரை, ஓவியம், மாறுவேடம், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

* நெ.10.முத்தூர் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசியர் நர்மதா தலைமை வகித்தார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

* கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில், பெருந்தலைவர் பேரவை சார்பில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பேரவையின் தலைவர் கதிர்வேல், பேரூராட்சி தலைவர் கதிர்வேல் பங்கேற்று மரியாதை செய்தனர்.






      Dinamalar
      Follow us