sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சொத்து வரிக்கு அபராதம் காற்றில் பறக்கும் உத்தரவு

/

சொத்து வரிக்கு அபராதம் காற்றில் பறக்கும் உத்தரவு

சொத்து வரிக்கு அபராதம் காற்றில் பறக்கும் உத்தரவு

சொத்து வரிக்கு அபராதம் காற்றில் பறக்கும் உத்தரவு


ADDED : பிப் 23, 2025 01:34 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,:அமைச்சர் அறிவித்த பிறகும், கோவையில் சொத்து வரி செலுத்தியவர்களிடம் 1 சதவீத அபராதம், 6 சதவீத வரி உயர்வு, குப்பை வரி வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில், சொத்து வரிக்கு ட்ரோன் சர்வே, 1 சதவீதம் அபராதம் வசூலிப்பது ஆகிய நடைமுறை உடனே நிறுத்தப்படும் என, இரு தினங்களுக்கு முன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அறிவித்தார். ஆனாலும், சொத்து வரிக்கு அபராதம் வசூலிப்பது தொடர்கிறது.

மாநகராட்சி பில் கலெக்டர்கள் கூறுகையில், 'ட்ரோன் சர்வே மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை எடுத்த கணக்கெடுப்பின்படி, வரி வசூலிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே எடுத்த ட்ரோன் கணக்கெடுப்பையும், 1 சதவீத அபராதம் விதிப்பதையும் இப்போதைக்கு நிறுத்தி வைக்க வாய்ப்பில்லை என, உயரதிகாரிகள் கூறியுள்ளனர். சொத்து வரி செலுத்த வருவோரிடம், அபராதம் வசூலிக்கப்படுகிறது' என்றனர்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''அபராதம் வசூலிப்பதை நிறுத்துவதற்கு வழிகாட்டுதல் நெறிமுறை கேட்டிருக்கிறோம். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சுற்றறிக்கையாக அனுப்புவதாகக் கூறியுள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us