/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பி.எஸ்.ஜி., டிராபி' கூடைப்பந்து போட்டி
/
'பி.எஸ்.ஜி., டிராபி' கூடைப்பந்து போட்டி
ADDED : பிப் 26, 2025 04:09 AM
கோவை; பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில், 49வது மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான 'பி.எஸ்.ஜி.டிராபி' கூடைப்பந்து போட்டி நேற்று துவங்கியது. ஆண்களுக்கான இப்போட்டியில், மாநிலத்தில் உள்ள 'டாப்' எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
'லீக்' முறையிலான போட்டிகளை, பி.எஸ்.ஜி., கல்லுாரி செயலாளர் கண்ணையன் துவக்கிவைத்தார். முதல் போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி 'ஏ' அணி, 67-29 என்ற புள்ளி கணக்கில், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது.
தொடர்ந்து, திருச்சி புனித ஜோசப் கல்லுாரி அணி, 52-47 என்ற புள்ளிகளில் டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி அணியையும், திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி அணி, 74-61 என்ற புள்ளிகளில், சென்னை டி.ஜி., வைஷ்ணவ் கல்லுாரி அணியையும் வென்றது.
குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 80-51 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி 'பி' அணியை வென்றது. நாளை வரை போட்டிகள் நடக்கின்றன.