sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருமண மண்டப நிர்வாகிக்கு 'பிடிவாரன்ட்'

/

திருமண மண்டப நிர்வாகிக்கு 'பிடிவாரன்ட்'

திருமண மண்டப நிர்வாகிக்கு 'பிடிவாரன்ட்'

திருமண மண்டப நிர்வாகிக்கு 'பிடிவாரன்ட்'


ADDED : ஆக 30, 2024 10:15 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;இழப்பீடு வழங்க தவறியதால், திருமண மண்டப நிர்வாகிக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

கோவை, ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவர், தனது மகள் திருமண நிகழ்ச்சிக்கு, சூலுார், குமரன் கோட்டம், ஆர்.வி.எஸ்., மண்டபத்தை முன்பதிவு செய்து, 70,000 ரூபாய் செலுத்தினார். கொரானா தொற்று முழு அடைப்பு காரணமாக, 2020, மே, 26 மற்றும் 27 ம் தேதி நடக்க இருந்த திருமண நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால், மண்டப நிர்வாகத்தினர், ஏற்கனவே செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்க மறுத்தனர்.

இதனால், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சேலம் நுகர்வோர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. விசாரித்த ஆணையம், முன் பதிவு தொகை, 70,000 ரூபாய் திருப்பி கொடுப்பதோடு, 90,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் , 2023, ஏப்ரலில் உத்தரவிட்டது. ஆனால், மண்டப நிர்வாகம் இழப்பீடு வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, திருமண மண்டப நிர்வாகிக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, சேலம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

......






      Dinamalar
      Follow us