/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆபத்தான மரத்தை வெட்ட பொதுமக்கள் கோரிக்கை
/
ஆபத்தான மரத்தை வெட்ட பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2024 10:23 PM
வால்பாறை : வால்பாறையில் குடியிருப்பு பகுதி அருகே, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும், என,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரில், காமராஜ் நகர், கக்கன்காலனி, நகராட்சி குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
தற்போது காற்றுடன் கனமழை பெய்யும் நிலையில், ஆபத்தான மரங்களால், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு வருகிறது.
மக்கள் கூறுகையில், 'வால்பாறையில், குடியிருப்பு பகுதியில் உயரமாக வளர்ந்த மரங்களை வெட்டக்கோரி மாவட்ட கலெக்டர் முதல் முதல்வர் வரை மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், குடியிருப்பு பகுதியில் உயரமாகவும், ஆபத்தான நிலையிலும் உள்ள மரங்களை வெட்டுவதற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

