/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் தொடர்பு முகாம்: 469 மனுக்கள் ஒப்படைப்பு
/
மக்கள் தொடர்பு முகாம்: 469 மனுக்கள் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 17, 2024 12:40 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வடபுதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
கிணத்துக்கடவு, வடபுதூர், தனியார் திருமண மண்டபத்தில், வடபுதூர், குதிரையாலம்பாளையம், பொட்டையாண்டிபுறம்பு மற்றும் சொக்கனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு மக்கள் தொடர்பு மற்றும் முதல்வரின் முகவரி முகாம் நடந்தது.
இதில், மாவட்ட துணை கலெக்டர் முருகேசன், பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்தரின் சரண்யா, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் சத்திய விஜயன், கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
முகாமில், 15 துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். மக்கள் தங்கள் குறைகளை மனுவாக அதிகாரிகளிடம் வழங்கினார்கள். இதில், மொத்தம், 469 மனுக்கள் பெறப்பட்டன.