sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மழை பாதிப்பு கண்காணிப்பு ; ஒன்றிய அதிகாரிகள் முனைப்பு  

/

மழை பாதிப்பு கண்காணிப்பு ; ஒன்றிய அதிகாரிகள் முனைப்பு  

மழை பாதிப்பு கண்காணிப்பு ; ஒன்றிய அதிகாரிகள் முனைப்பு  

மழை பாதிப்பு கண்காணிப்பு ; ஒன்றிய அதிகாரிகள் முனைப்பு  


ADDED : மே 30, 2024 11:48 PM

Google News

ADDED : மே 30, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த வாரம் பெய்த கனமழையால், ஆங்காங்கே உள்ள குளங்களுக்கு நீர்வரத்து இருந்தது. அதேநேரம், தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

இந்நிலையில், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மழை பாதிப்பு ஏற்பட்டால் துரிதமாக சீரமைப்பு பணி மேற்கொள்ள அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். பாதிப்புகளை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஒன்றிய பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஊராட்சித் தலைவர்கள் வாயிலாக அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதேநேரம், கோடையில் பெய்த கனமழையால், ஊராட்சிகளில், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us