/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலக்காட்டில் ரேக்ளா 72 ஜோடிகள் பங்கேற்பு
/
பாலக்காட்டில் ரேக்ளா 72 ஜோடிகள் பங்கேற்பு
ADDED : செப் 08, 2024 11:38 PM
பாலக்காடு;ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பாலக்காட்டில் ரேக்ளா போட்டி கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்துார் தோணிட்பாடம் என்னுமிடத்தில், மத நல்லிணக்க விவசாய சங்கம் மற்றும் கோணிப்பாடம் இளைஞர் குழு ஒருங்கிணைந்து, ஓணம் பண்டிகையை முன்னிட்டு, முகமதுகுட்டி குருக்கள் மைதானத்தில், 'காளைபூட்டு' என்று அழைக்கப்படும் ரேக்ளா போட்டி நடந்தது.
ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் ஆகியப் பிரிவுகளில், 72க்கும் மேற்பட்ட காளை மாடுகள் ஜோடிகளாக போட்டியில் பங்கேற்றன.
போட்டியில், மாவேலி மன்னரின் வேடமணிந்து போட்டியிட்ட வீரர், சீறிய படி சென்றது காண்பவரை கவர்ந்தது.
குறுகிய நேரத்தில் இலக்கில், எட்டும் பல்வேறு பிரிவு காளை ஜோடிகளுக்கு, காசோலையும் கோப்பையும் பரிசாக வழங்கினர்.
வயநாடு நிவாரண நிதிக்கு பணம் திரட்டும் நோக்கத்துடன், இந்தப்போட்டியை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.