sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போத்தனுார் அருகே பூங்கா இடம் மீட்பு

/

போத்தனுார் அருகே பூங்கா இடம் மீட்பு

போத்தனுார் அருகே பூங்கா இடம் மீட்பு

போத்தனுார் அருகே பூங்கா இடம் மீட்பு


ADDED : ஜூலை 05, 2024 12:14 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்:போத்தனுார் அருகே அம்மன் நகர் ரிசர்வ் சைட்டில் அமைக்கப்பட்டிருந்த பாதைக்கு மாநகராட்சி சார்பில் வேலி போடப்பட்டது.

போத்தனுார் அருகே, 85 வது வார்டுக்குட்பட்டது, அம்மன் நகர். இதன் பிரதான சாலையின் இறுதியில் ராஜவாய்க்காலை ஒட்டி, 30 சென்ட் ரிசர்வ் சைட் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் சைட்டை சாலையாக காட்டி, இடங்களை விற்பனை செய்தனர்.

இதற்காக வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதியினர் சார்பில், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்பகுதியினருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், நேற்று காலை நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில், உதவி இன்ஜி., சரண்யா, பாதையை கம்பிவேலி போட்டு அடைக்கும் பணியை மேற்கொண்டார்.

மேலும், ''இவ்விடம் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஒதுக்கீட்டு இடமாகும். அந்நியர்கள் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது'' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனையொட்டி, 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்பகுதியினர் கூறுகையில், '' 25 ஆண்டுகட்கும் மேலான பிரச்னைக்கு தற்போது நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது.

''தற்போது, 30 சென்டில் சுமார், 15 சென்ட் இடம்தான் மீட்கப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள இடத்தையும் மீட்கவேண்டும். அதுபோல், பூங்கா அமைக்கவும் மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us