/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிகிச்சைக்கு இழப்பீடு தர மறுப்பதா; இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
/
சிகிச்சைக்கு இழப்பீடு தர மறுப்பதா; இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
சிகிச்சைக்கு இழப்பீடு தர மறுப்பதா; இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
சிகிச்சைக்கு இழப்பீடு தர மறுப்பதா; இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
ADDED : ஜூன் 12, 2024 10:37 PM
கோவை : மருத்துவ சிகிச்சை பெற்றதற்கு இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை அருகேயுள்ள மயிலம்பட்டி, கரையாம்பாளையத்தை சேர்ந்த யமுனா ராணி, கோவை திருச்சிரோட்டிலுள்ள நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வாயிலாக, குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு செய்திருந்தார். மருத்துவ சிகிச்சையின் போது, நான்கு லட்சம் ரூபாய் வரை கிளைம் செய்ய நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், யமுனாராணியின் தந்தை செல்வராஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதற்கு 9.21 லட்சம் ரூபாய் மருத்துவ செலவானது. சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்த போது, பல்வேறு காரணங்களை கூறி நிராகரித்தனர்.
இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் சிகிச்சை பெற்ற தொகையில், நான்கு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 25,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

